2022 ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

மும்பை: குஜராத் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.