அனுமன் ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது

தலைநகர் டெல்லியில் அனுமன் ஜெயந்தியைஒட்டி நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இந்த மோதல் சம்பவத்தில் கலவரத்தை தடுக்க முயன்ற போலீசார் 8 பேர் உட்பட 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு குண்டடி பட்டுள்ளது. இந்த நிலையில், மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.