அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் வெளிநாடு செல்வதனை தடுக்கும் வகையில் வழக்குத் தொடரப்பட உள்ளது.
அரசாங்கத்தின் நான்கு மிக முக்கியஸ்தர்களுக்கு எதிராக நாளைய தினம் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
குறித்த தலைவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது.
இந்த முக்கியஸ்தர்கள் வெளிநாடு செல்வதனை தடுக்கும் வகையில் தடையுத்தரவு ஒன்றையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட உள்ளது.
சட்டத்தரணிகள் குழுவொன்றினால் இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது.