கோத்தபய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்- இலங்கை எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

கொழும்பு:
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்வால் அவதியடைந்துள்ள அந்நாட்டு மக்கள் அதிபர் அலுவலகத்திற்கு வெளியே தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுபேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று போராட்டகாரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இலங்கை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறினால், கோத்தபய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவோம் என முக்கிய எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கையில் இன்று அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 
இந்த கூட்டத்தில்  கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்படும் என முக்கிய எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கோத்தபய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகவும், இன்றைய ஆலோசனை கூட்டத்தில் அது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.