தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியல் ஆளுநர் பங்கேற்பதா? வலுக்கும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு

தெலங்கானாவில் நடைபெறும் புஷ்கர விழாவில் பங்கேற்க வரும் 19 ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஞானரத யாத்திரையை தொடங்கவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மயிலாடுதுறையில் உள்ள தருமபரம் ஆதீன மடத்திற்கு சென்ற திராவிடர் கழகத்தினர், திராவிடர் விடுதலைக் கழகத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர், தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். மேலும், தங்களது எதிர்ப்பை மீறி ஆளுநரை அழைத்து ஆதீனம் நிகழ்ச்சியை நடத்தினால் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.
image
அதே நேரம் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது பாரதிய ஜனதாவினர் வலியுறுத்தியுள்ளனர். மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோரை திரட்டி ஆளுநரை வரவேற்போம் எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்தி: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.