போலீஸ் எனக் கூறி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

ஸ்ரீபெரும்புதூரில் போலீஸ் எனக் கூறி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

வைப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த லுட்பூர் ரகுமான் என்பவரிடம் போலீஸ் யூனிஃபார்மில் டூவீலரில் வந்த இருவர், பணம் கேட்டு மிரட்டி தாக்கியதில், பயந்து போன ரகுமான் தனது வங்கி கணக்கில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் அனுப்பி வைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ரகுமான் தனது நண்பர்களுக்கு தெரிவித்த நிலையில்,செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் இருவரையும் வரவழைத்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில், போலி போலீஸ் என தெரியவந்தது.

தகவலின்பேரில் வந்த போலீசார், காரணிதாங்கள் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், வஞ்சுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்து இருசக்கரவாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.