தகாத வார்த்தையால் திட்டியதால் இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு.. மேல்பாடி காவல் உதவி ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தகாத வார்த்தைகளால் திட்டியதால் தீக்குளித்த இளைஞர் உயிரிழந்ததை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குகைநெல்லூரைச் சேர்ந்த சரத் என்ற இளைஞர் மீது மைனர் பெண்ணை கடத்திச் சென்ற வழக்கில் உடந்தையாக இருந்ததாக கூறி மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கை விசாரித்து வரும் காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி சரத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சரத்  கடந்த 12ஆம் தேதி தீக்குளித்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.