அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை 10 முதல் 13 நாட்கள் மட்டுமே! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடை விடுமுறை 10 முதல் 13 நாட்கள் மட்டுமே இருக்கும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துற அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார்.

சென்னையில், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.  இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு 47அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பாசிரியர் என்ற விருதுகளை வழங்கி பேசினார். அப்போது, இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்துதான் பொதுத்தேர்வுக்கு கேள்விகள் வரும். அதனால், இதுவரை பாடங்களை  நடத்தாமல் இருந்தால் அவற்றை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசியவர், கோடை காலத்தில் பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறைந்தது சனிக்கிழமைகளில்  பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும்  ஏராளமானோ கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பின் காரணமாக  கடந்த ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டதால் பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான பாடங்களை நடத்த  முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது குறைக்கப்பட்ட பாடங்கள் போக மீதம் உள்ள பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் இந்த ஆண்டு மேமாத கோடை விடுமுறை குறையும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தவர்,  மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  கோடை விடுமுறை அளிக்கப்படும், அடுத்த ஆண்டில் வழக்கம் போல ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும்  என்றார்.

மேலும்,  ஆசிரியர் சங்கங்களுடன் நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளில் அரசாணை எண் 101, 108 ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.