புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.
இதன்போது ஜனாதிபதி நிகழ்த்திய உரை இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், வானொலிகளிலும் ஒலிபரப்பப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இதேவேளை பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று காலை 17 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி…
பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 17 அமைச்சர்கள் நியமனம்: முழுமையான விபரம் வெளியானது (Video)