முகக்கவசம் அணிவது கட்டாயம்: உ.பி., அரசு அதிரடி உத்தரவு!

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என, உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைந்தது. இதன் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன், நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதற்கிடையே, தலைநகர் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் தினசரி பாதிப்பும் உயர்ந்துள்ளது. சுமார் ஆயிரத்திற்கு கீழே பதிவாகி வந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது இரண்டு ஆயிரத்தைக் கடந்துள்ளது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, பொது இடங்களில்
முகக்கவசம் அணிவது கட்டாயம்
என, உத்தர பிரதேச மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கௌதம் புத்தா நகர், காசியாபாத், ஹாபூர், மீரட், புலந்த்ஷாஹர், பாக்பத் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில், முகக் கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக உத்தர பிரதேச மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.