‘பாஜகவின் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்’- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா புகார் மனு

“பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா” குறித்து பேசி ஆடியோ வெளியிட்டுள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை டி.ஜி.பி அலுவலகத்தில் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (Popular Front of India) அமைப்பின் மாநிலச் செயலாளர் நாகூர் மீரான் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், “பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
image
எனவே பாஜக முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய அமைப்பினர் நம்மை தாக்கக் கூடும் என அந்த ஆடியோவில் உள்ளது. மதக்கலவரதை தூண்டும் விதமாக செயல்படுகின்ற அண்ணாமலையை தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்க்க கூடாது. காவல்துறை அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.