“என் முதல் சம்பளம் இதுதான்… "- நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த நடிகை சமந்தா!

இன்று டோலிவுட், கோலிவுட் என்று கலக்கி வருபவர் சமந்தா. இவர் தன் திரைப்பயணத்தை 2010-ல் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்சனான ‘யே மாயா ச்சேசவே (Ye Maaya Chesave) என்ற படத்திலிருந்து தொடங்கியவர். 2014-ல் விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படம் தமிழ் திரையுலகில் இவருக்கு நல்ல வரவேற்பைத் தந்தது. அதன் பின் பல படங்களில் நடித்த சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ட்ரெண்டிங் ஸ்டார் ஆகிவிட்டார். அண்மையில் வெளியான ‘புஷ்பா’ படத்திற்கு பிறகு அவரது சமூக வலைதள பதிவுகள் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் அவரின் சமூக வலைதள பக்கத்தில் அவரின் முதல் சம்பளம் எவ்வளவு என்று கேட்ட கேள்விக்கு நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார் சமந்தா.

காத்துவாக்குல ரெண்டு காதல்

தான் பள்ளி பருவத்தில் 11, 12ம் வகுப்புகள் படிக்கும்போது வரவேற்பாளராக ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 8 மணிநேரம் வேலை செய்துள்ளார், அதற்கு அவர் ரூ.500 சம்பளமாக வாங்கியுள்ளார். அது தான் அவர் வாங்கிய முதல் சம்பளம் என்று கூறியுள்ளார் சமந்தா.

அண்மையில் இவர் நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் வரும் ஏப்ரல் 28-ல் வெளியாக உள்ளது. மேலும் ‘டவுன்டன் அபே’ படம் மூலம் புகழ்ப்பெற்ற பிலிப் ஜான் இயக்கத்தில் தனது முதல் சர்வதேச படமான ‘ Arrangements Of Love’ எனும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.