ரஷிய அரசியல்வாதியை கைது செய்து புதினிடம் பேரம் பேசும் உக்ரைன்

ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 54வது நாளாக நடைபெற்று வருகிறது. ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. உக்ரைனும் ரஷிய படைகளுக்கு எதிராக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரஷியா ஆதரவு அரசியல்வாதியான விக்டர் மெட்வெத்சக்கை உக்ரைன் படைகள் 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்தன.
இந்நிலையில் தற்போது அவரை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் படைகளையும், பொதுமக்களையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கை ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் வைக்கபட்டுள்ளது. விக்டர் மெட்வெத்சக்கே வீடியோவில் புதினுக்கு நேரடியாக கோரிக்கை வைப்பது போல வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.