மீண்டும் உருவெடுக்கும் கேஜிஎஃப் 3 …! படத்தின் அப்டேட் வெளியிடு…!

கடந்த 2019-ஆம் ஆண்டு
பிரசாந்த் நீல்
இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் கேஜிஎப்.
யாஷ்
ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் 2-ம் பாகத்துக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, அதனை பூர்த்தி செய்யும் வகையில் வந்த படம் தான்
கே.ஜி.எஃப்
2.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த இப்படத்தை கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட்டனர்.இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக மிரட்டியிருக்கிறார். முதல் பாகத்தில் வில்லன் கதாபாத்திரமான
கருடன்
இறந்த பிறகு, கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெறும் அதிகார மோதலும், ராக்கி பாயின் விஸ்வரூபமும்தான் இரண்டாம் பாகத்தின் கதையாக உருவாகி இருந்தது.

கணவருடன் பீச்சில் ஈஸ்டரை கொண்டாடிய பிரபல நடிகை… ‘அவரை’ பற்றி விசாரித்த ரசிகாஸ்!

இப்படம்வெளியான நாள் முதல்
பாசிடிவ்
விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் வசூலிலும் ராஜாவாக திகழ்ந்து வருகிறது. கேஜிஎஃப்வெளியான 4 நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் இறுதியில் ரசிகர்களுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. அது கே.ஜி.எஃப் படத்தின் 3-ம் பாகம் உருவாகும் என்பதுதான்.

இப்படத்திற்கு8 ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருக்கவேண்டும் என்று இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்திருந்தார். தற்போது பிரபாஸ் நடிக்கும்
சலார்
படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வரும் நிலையில் இப்படத்தின்
ஷூட்டிங்
30 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது.

அதனால் எஞ்சியுள்ள 70 சதவீத படப்பிடிப்பை முடித்த பின்னரே அவர் கே.ஜி.எஃப் 3 படத்தின் பணிகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்றாம் பாகம் உருவாவது குறித்த இயக்குனர் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.