டெல்லியில் காவல்துறையினர் மீது கல்வீச்சு.. ஒருவர் கைது.!

டெல்லி ஜகாங்கீர்புரி வன்முறையில் தொடர்புடையவன் வீட்டிற்கு விசாரணைக்குச் சென்ற காவல்துறையினர் மீது இன்றும் கல்வீசித் தாக்கியதையடுத்து ஒருவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி ஜகாங்கீர்புரியில் அனுமன் பிறந்த நாள் ஊர்வலத்தின்போது கல்வீசித் தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதில் ஊர்வலத்தில் சென்றவர்களும் காவல்துறையினரும் காயமடைந்தனர்.

நீல நிறக் குர்தா அணிந்தவன் ஒரு வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுட்ட வீடியோ வெளியான நிலையில் அவனைத் தேடிப் பிடிக்கவும், வன்முறை குறித்து விசாரிக்கவும் இன்று அந்த வீட்டுக்குக் காவல்துறையினர் சென்றனர்.

அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் இரண்டு கற்களைக் காவல்துறையினரை நோக்கி எறிந்ததாகவும், இதையடுத்து அங்கிருந்த ஒருவனைப் பிடித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சனியன்று நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.