இலங்கையில் 17 அமைச்சர்களுடன் புதிய அமைச்சரவை பதவியேற்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கையில் 17 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். 17 பேரும் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதற்கிடையே பிரதமர் ராஜபக்சேவை தவிர்த்து 26 அமைச்சர்களும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதனால், பார்லிமென்ட் மற்றும் அரசு விவகாரங்களை முன்நடத்தி செல்ல நிதியமைச்சர் உள்ளிட்ட 4 அமைச்சர் பதவிகளில் புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இந்நிலையில், நேற்று இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டது.

latest tamil news

அதன்படி, கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் இன்று (ஏப்.,18) புதிய அமைச்சரவை பதவி ஏற்று உள்ளது. இந்த அமைச்சரவையில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயகவிற்கு வனத்துறையும், மோகன், பிரியதர்ஷன் டி சில்வாவிற்கு குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.