திருச்சி: கோவில் விழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் படுகொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் விழாவில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெண் கொலை செய்யப்பட்டார்.
துறையூர் அருகே செல்லிப்பாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. அம்மன் வீதி உலா நிகழ்ச்சிக்காக சாமி சிலையை யாருடைய டிராக்டரில் ஏற்றுவது என்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் கார்த்திக் ஆகியோருக்கும், மற்றொரு தரப்பான வினோத் முரளிதரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
image
இந்த நிலையில் அம்பேத்கார் நகர் தெற்கு பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு சந்திரசேகரும் அவருடைய தம்பி கார்த்திக்கும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த அருள், முரளிதரன் ஆகிய இருவரும் சேர்ந்து பிரசாந்த், வினோத் மற்றும் உறவினர் பாண்டியன் ஆகியோரை தாக்கியுள்ளனர். மகன்கள் தாக்கப்படுவதைக் கண்ட அவர்களுடைய தாயார் சிவகாமி, சண்டையை விலக்கி விடச் சென்றுள்ளார்.
image
அப்போது அவரும் தாக்குதலுக்குள்ளாகி கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார், முசிறி டிஎஸ்பி அருள்மணி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சிவகாமியின் பிரேதத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.