இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை நடிகர்
வடிவேலு
வெளியிட்டுள்ளார். பரியேறும்பெருமாள்,
கர்ணன்
போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட.
அவர் எழுதிய ‘தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்’, ‘மறக்கவே நினைக்கிறேன்’ என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும்.இந்த நூல்களைத் தொடர்ந்து
மாரி செல்வராஜ்
எழுதிய மூன்றாவது நூலாக ‘
உச்சினியென்பது
‘ என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது.
கணவருடன் பீச்சில் ஈஸ்டரை கொண்டாடிய பிரபல நடிகை… ‘அவரை’ பற்றி விசாரித்த ரசிகாஸ்!
இந்த நூலை மாரிசெல்வராஜின்
மாமன்னன்
படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.மாரி செல்வராஜ் தற்போது
உதயநிதி ஸ்டாலின்
நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்.
நடிகை
கீர்த்தி சுரேஷ்
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் வடிவேலுவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!