சுடு தண்ணீரில் விழுந்த ஐந்து வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வாணிபம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மகள் இருக்கிறார். சம்பவதன்று, வீட்டின் சமையலறையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது , அடுப்பில் கொதித்து கொண்டிருந்த சுடுநீரில் திடீரென்று தவறி விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுடுதண்ணீரில் விழுந்து குழந்தை உயிரழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது