சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் திட்டம் மூலம் புதிய மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் மேம்பாலங்களின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கப்படும்.
அதன்படி, இந்திரா நகர் மற்றும் டைடல் பார்க் சந்திப்பு, மத்திய கைலாஷ் சந்திப்பு, காட்டுப்பாக்கம், குன்றத்தூர், குமரன்சாவடி, சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.
மேலும், தேனாம்பேட்டையில் நான்குவழிச் சாலை, பாடி மேம்பாலம் அகலப்படுத்தும் பணி, வியாசர்பாடி, தெற்கு உஸ்மான் சாலை, சி.ஐ.டி நகர் போன்ற இடங்களில் மேம்பால பணி தொடங்கப்பட உள்ளது.
6 புதிய மேம்பாலங்கள் மற்றும் பாலங்களுக்கான டி.பி.ஆர் விரைவில் தயாரிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.