பீஜிங் : சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனாவுக்கு மூன்று பேர் பலியானதாக, முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில், ஒமைக்ரானின் மரபணு மாறிய, எக்ஸ்.இ., வகை வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதையொட்டி, கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக, ஷாங்காய் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷாங்காயில் புதிய வைரஸ் பாதிப்பால், 89 – 91 வயதுள்ள மூவர் உயிரிழந்துஉள்ளதாக, முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஷாங்காய் அரசு, தொழில் துறைக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை வெளியிட்டு, மீண்டும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதித்துள்ளது.
கடந்த மார்ச் முதல் ஷாங்காயில், 3.72 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம், சீனாவில், 2,723 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ஷாங்காயில் மட்டும், 2,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க, ஷாங்காயில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement