சோனியா காந்தியுடன், பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை

புதுடெல்லி:
சோனியா காந்தியுடன், பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பி சிதம்பரம், முகுல் வாஸ்னிக் மற்றும் அம்பிகா சோனி ஆகியோரும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது சந்திப்புக் கூட்டத்தில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் வியூகம் குறித்து பிரசாந்த் கிஷோர் விரிவான விளக்கத்தை அளித்திருந்தார்.

அப்போது 370 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள இடங்களில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களில் சோனியா – பிராசாந்த் கிஷோர் இருவரும் சந்தித்து கொள்வது இது இரண்டாவது முறையாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.