கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள்.. பூஜைப் பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள் அங்கிருந்த பூஜைப் பொருட்களை சேதப்படுத்தின.

நேற்று அதிகாலை 3 மணி அளவில்  தலைகுந்தா பகவான் கோவில் கதவை உடைத்து புகுந்த 2 கரடிகள் அங்கிருந்த,நெய். எண்ணெய்.தேன்.வாழைப்பழம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது.

இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.