கொழும்பு : இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், நேற்று 17பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மக்கள் எதிர்ப்பு காரணமாக, தன் குடும்பத்தினர் யாரையும் அவர் அமைச்சராக்கவில்லை. பிரதமராக மகிந்த ராஜபக்சே மட்டும் நீடிக்கிறார். நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், பல நெருக்கடிகளுக்கு ஆளாகிஉள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளதால், அதிபரும், பிரதமரும் பதவி விலகக் கோரி, அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, 3ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர்த்து, 26 அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே, ஏற்கனவே நியமித்த நான்கு அமைச்சர்களுடன், புதிதாக 17 பேரை அமைச்சர்களாக நியமித்துள்ளார். அவர்கள் நேற்று பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தினர் இடம் பெறாததால், மக்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுமா அல்லது தொடருமா என தெரியவில்லை.
கொழும்பு : இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், நேற்று 17பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மக்கள் எதிர்ப்பு காரணமாக, தன் குடும்பத்தினர் யாரையும் அவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.