16வது மாநில கூடைப்பந்து போட்டி! ஏப்ரல் 29ஆம் தேதி துவங்குகிறது.!

16வது மாநில கூடைப்பந்து போட்டி வரும் 29-ஆம் தேதி துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநில கூடைப்பந்து போட்டி ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்குகிறது.

ஐ.ஓ.பி., கஸ்டம்ஸ், தெற்கு ரயில்வே உள்ளிட்ட முன்னணி அணிகள் உட்பட 100 அணிகள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் நான்கு இருபாலர் அணிகளுக்கு பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.