கோட்டாகோகம போராட்டக்காரர்கள் தொடர்பில் பீ அறிக்கை தயாரிக்குமாறு உத்தரவு



கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்படும் சம்பவம் தொடர்பில் பி அறிக்கை ஊடாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறுகள் அல்லது கலவரம் ஏற்படுத்தினால் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு பி அறிக்கை ஊடாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கோட்டை பொலிஸார் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்ட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு இதுவரையில் போராட்டக்காரர்கள் கோட்டாகோகம என பெயரிட்டுள்ளமையும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.