வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைனின் நகரை கைப்பற்ற கடுமையான தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, அந்நகரை தக்க வைப்பதற்காக போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: டாஸ்போஸ் நகரை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை துவக்கி உள்ளன. இதற்காக, அவர்கள் நீண்ட காலமாக தயாராகி வந்தனர். கணிசமான அளவு படைகள் அங்கு குவிக்கப்பட்டு தாக்குதல் நடந்து வருகிறது.எவ்வளவு வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டாலும் கவலையில்லை. நாங்கள் தொடர்ந்து போராடி தற்காத்து கொள்வோம். நாங்கள் அதனை தினமும் செய்வோம். உக்ரைனின் எதனையும் விட்டு கொடுக்க மாட்டோம்.
லுஹன்ஸ்க், டோன்ஸ்ட்க், கார்கிவ் நகரங்களில், எங்களது பாதுகாப்பை, ஊடுருவல்காரர்கள் உடைக்க முயற்சித்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக, எங்களது ராணுவ வீரர்கள் அந்நகரங்களை தங்களது கட்டுக்குள் வைத்துள்ளனர். கிரிமின்னா மற்றும் சிறிய நகரம் தான் கைவிட்டு போனது. போர் தொடர்ந்து நடக்கிறது. எங்களது பிராந்தியங்களை நாங்கள் கைவிடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement