கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகும் அடுத்தப்படம்…! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!

நடிகை
கீர்த்தி பாண்டியன்
நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளாக அறியப்படுபவர் நடிகை கீர்த்தி பாண்டியன். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் இவர்,
தும்பா
படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

அதன்பிறகு தனது அப்பா அருண் பாண்டினும் இணைந்து
அன்பிற்கினியாள்
என்ற படத்தில் நடித்தார். அப்பா- மகள் உறவு குறித்து பேசிய இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது.

இந்த படத்திற்கு பிறகு புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் கீர்த்தி பாண்டியன்.

Dhanush:மீண்டும் லீக்கான தனுஷ், நித்யா மேனன் வீடியோவால் பரபரப்பு

அந்த வகையில் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். ‘கண்ணகி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஷாலினி என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாகயும், வினோத் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாகும் இந்த படத்தை
கிரிமூர்ப்பி
என்பவர் இயக்கவுள்ளார்.

சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில்
அமீர் பரத் ராம்
தயாரிக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று இப்படம் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதால் கீர்த்தி பாண்டியனின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.