சென்னை: தமிழ்நாட்டில் 17 டி.எஸ்.பி. களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை கிண்டி சரக டி.எஸ்.பி. புகழ்வேந்தன் மீனம்பாக்கம் சரக டி.எஸ்.பி. யாக மாற்றபட்டார். மீனம்பாக்கம் சரக டி.எஸ்.பி. அர்னால்டு ஈஸ்டர் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு மாற்றபட்டார். பெருநகர் சென்னை உளவுப்பிரிவு டி.எஸ்.பி. சார்லஸ் ராயப்பேட்டை சரகத்துக்கு மாற்றபட்டார்.