இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
. தினமும் ஏதாவது ஒரு பதிவு பகிர்ந்து டிரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் படுவேகமாக வைரலாகியது.
அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து
ராகவா லாரன்ஸ்
நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார்.
ஓ சாத்தி சல்
என தலைப்பிடப்பட்டுள்ள இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
எப்பவும் இப்படியே இருங்க: திடீரென ஐஸ்வர்யாவை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்.!
இந்நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ஸ்கிரிப்ட் ஓர்க்கில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வொர்க் மூடு தான் பெஸ்ட் மூட் என்றும் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.