கிருஷ்ணகிரியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மாயம்.. 8 பேருக்கு போலீசார் சம்மன்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பள்ளி பாடப்புத்தகங்கள் மாயமான விவகாரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வட்டார கல்வி அலுவலர் உட்பட  8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்த 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 12 ஆயிரம் பாட புத்தகங்கள் மாயமாகி இருப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள், போலீசில் புகார் அளித்தார்.

பின்னர் இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலக மைய வளாகத்தின் உதவியாளர் தங்கவேல், கிளர்க் திருநாவுக்கரசு ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முன்பு பணியில் இருந்த மற்றும் தற்போது பணியில் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 8 பேரை நேரில் ஆஜராகுமாறு கூறி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.