தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது – பொது மக்களுக்கு ஷாக் நியூஸ்!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனல் மின் நிலையங்களின் மூலமாகவே நாட்டின் மின்சாரத் தேவை தற்போது பெருமளவில் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த நில நாட்களாக தமிழகம் முழுவதுமே இரவு நேரங்களில் 3 முதல் 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அதற்கு நிலக்கரிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடும் முக்கிய காரணம். கோடை காலம் துவங்கி விட்டதால், தற்போதைய மின் தேவை ஒவ்வொரு மாநிலத்திலுமே 15 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 500 மெட்ரிக் டன் அளவுக்கும் குறைவான அளவிலேயே நிலக்கரி இருப்பில் உள்ளது.

இதனால் நாடு முழுவதும் தற்போது கடும் நிலக்கரி பற்றாக்குறை நிலவி வருகிறது. போதிய நிலக்கரி இருப்பு கையில் இல்லாததால், தனியார் நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி வாங்க வேண்டிய நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இதனை சமாளிக்கும் வகையில் அந்தந்த மாநில அரசுகள் மின்சார கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சமையல் எண்ணெய் உள்ளிட்ட விலை உயர்வால் மக்கள் செய்வதறியாது விழிப்பிதுங்கி நிற்கும் நிலையில், தற்போது மின் கட்டணமும் உயரப்போகிறது என்ற தகவல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.