போராட்டக்காரர்களை தடுக்கச் சதி: வீதித் தடைகளில் முட்கம்பிகள்! பொலிஸாரின் செயற்பாடு அம்பலம் (Video)


காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் இன்றைய தினம் இவ்வாறான கிளை ஆர்ப்பாட்டங்களை தடுக்க பொலிஸார் காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில்  வீதித் தடைகளை இட்டு பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தனர். 

இவ்வாறு போடப்பட்டிருந்த பொலிஸ் வீதித் தடைகளில் முட்கம்பிகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த வீதித் தடைகளுக்கு அப்பால் ஊடகவியலாளர்களையும் அனுமதிக்கவில்லை என்ற காரணத்தில் ஊடகவியலாளர்கள் சிலர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.