#திருவண்ணாமலை || 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! சிறுவன் உட்பட இருவர் கைது.!

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியை சேர்ந்த சிறுமி (வயது 13) தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்த போது, வேட்டவலம் பகுதியிலுள்ள உணவகத்தில் வேலை பார்த்து வரும் மார்பின் சீரி (வயது25) என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி வலுக்கட்டாயமாக வீட்டின் மாடிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மேலும், அவருடன் உணவகத்தில் வேலை பார்க்கும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த  சிறுவனையும் (வயது 17 ) அழைத்து சென்றுள்ளார்.  மார்பின் சீரியும், சிறுவனும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

மாணவி, திருவண்ணாமலை குழந்தைகள் காப்பக மையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன் பின்னர், அவர்கள் மாணவியை மீட்டு திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து குழந்தைகள் காப்பக நல அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்தனர். தப்பி ஓடிய மார்பின் சீரியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.