குறுகிய நேரத்தில் தீவிர தாக்குதலுக்கு தயாராக வேண்டும்: இந்திய விமானப்படை தளபதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: குறைந்த நேரத்தில் அதிதீவிர தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

டில்லியில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற இந்திய விமானப்படை தளபதி சவுத்ரி பேசியதாவது: தற்போதைய உலக அரசியல் சூழல்நிலைகளில், எந்த நடவடிக்கைக்கும் விமானப்படை தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஒரு குறுகிய நேரத்தில் அதிதீவிர தாக்குதல்களுக்கு இந்திய விமானப்படை தயாராக இருக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

latest tamil news

நமது படை பலங்கள் வெவ்வேறு இடங்களில் பரந்து விரிந்துள்ளதை கருத்தில் கொள்ளும்போது இது போன்ற சூழலுக்கு தயாராவது சவால் நிறைந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.