இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.. சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை மர்ம நபர்கள் பறிக்க முயன்ற சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

குளச்சல் காமராஜர் தெருவை சேர்ந்த பரிமளா என்ற பெண், இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது, சாலையின் எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்மநபர்கள், பரிமளா கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க செயினை பறிக்க முயன்றனர்.

அப்போது அப்பெண் தவறி கீழே விழுந்தபோது நகையும் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதனை எடுக்க வந்த மர்மநபரை அந்த பெண்ணும், சாலையில் இருந்த ஒருவரும் துரத்தியதால், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.