தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன்காரணமாக, இன்றும் நாளையும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள், ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM