திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை சுப்ரபாத தரிசனத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம் செய்தனர்.
காத்துவாக்குல 2 காதல் படம் இன்று வெளியானதை அடுத்து நேற்றிரவே திருமலை வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இன்று அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களை கண்ட ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து செல்பி எடுத்துக் கொண்டனர்.