பூமியை நோக்கி வரும் சிறுகோள்களை தாக்கி அழிக்க சீனா திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீஜிங்: புவியை நோக்கி வரும் சிறுகோள்களை கண்டுபிடித்துத் தாக்கி அழிக்கும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருவதாகச் சீன விண்வெளி ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

latest tamil news

பூமியையும் மனித இனத்தையும் காப்பதில் இந்த அமைப்பு முதன்மையானதாக இருக்கும் என, சீன விண்வெளி அமைப்பின் துணைத் தலைவர் ஊ யான்குவா தெரிவித்தார். 2025ம் ஆண்டில் இந்த அமைப்பு நிறுவப்படும் என்று மேலும் அறிவித்தார்

latest tamil news

சிறு கோள்களின் வேகம், தொலைவு அவை பூமியை நெருங்கும் நேரம் ஆகியவற்றைக் கண்டறிந்து அதைத் தாக்குவதற்கான வாய்ப்பு, ஒத்திகை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மென்பொருளையும் இது கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.