ரொம்ப கஷ்டம்னு தனுஷ் சொன்னது அப்போ புரியல, இப்போ புரியுது: செல்வராகவன்

இயக்குநர்கள் நடிகர்களாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இயக்குநர் செல்வராகவனும் நடிகராகிவிட்டார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்
செல்வராகவன்
.

மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் சேர்ந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் அமேசான் பிரைமில் மே மாதம் 6ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

செல்வராகவனுக்கு நடிக்க சொல்லிக் கொடுக்க வேண்டியதே இல்லை. அது பீஸ்ட் படத்தை பார்த்தபோதே தெரிந்தது. இந்நிலையில் நடிப்பு குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

நீ நடிக்க வந்து பார். அப்போ தான் நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் என்பது உனக்கு தெரியும் என என் தம்பி
தனுஷ்
அன்றே சொன்னான். அது இப்போ தான் புரியுது என்றார்.

இயக்குநர் செல்வராகவனை திருப்திபடுத்துவது மிகவும் கடினம். கூடுதலாக கண் இமைத்தால் கூட ரீடேக் சொல்லிவிடுவார். அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்று தனுஷ் முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பல ஆண்டுகள் கழித்து மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.
நானே வருவேன்
என்கிற அந்த படத்தை இயக்கியதுடன், வில்லனாகவும் நடித்திருக்கிறார் செல்வராகவன்.

நேத்து ராத்திரி…: ஐஸ்வர்யா வெளியிட்ட ‘ஹேப்பி போட்டோ’

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.