ஜெனீவாவில் புதிதாக பாஸ்போர்ட் மற்றும் அனுமதிகள் வழங்குவதற்கான மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பையோமெட்ரிக் மையம் திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாஸ்போர்ட்கள் மற்றும் அனுமதிகள் வழங்குவதை விரைவாக செய்ய முடியும் என நம்பிக்கை உருவாகியுள்ளது.
ஆனாலும், தங்களிடம் போதுமான அலுவலர்கள் இல்லை என்று கூறியுள்ள மாகாண அதிகாரிகள், மேலும் 15 பணியாளர்களாவது இருந்தால்தான் சமாளிக்க முடியும் என்கிறார்கள்.
இருந்தாலும், இந்த புதிய பாஸ்போர்ட் மற்றும் அனுமதிகள் வழங்கும் மையத்தால், நாளொன்றிற்கு 700 விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும் என்பதால், நிச்சயம் பாஸ்போர்ட் பெறுவதற்காக மக்கள் நிற்கும் வரிசையின் நீளம் குறையும் என்பதில் சந்தேகமில்லை.