சுயசார்புடன் ராணுவத் துறை அமைச்சர் வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி,-”ராணுவத் துறையில் நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை, ரஷ்யா – உக்ரைன் போர் நமக்கு உணர்த்துகிறது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.நம் கடற்படை கமாண்டர்களின் நான்கு நாள் மாநாடு டில்லியில் நடந்தது. இதன் இறுதி நாளான

நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது :நம் நாடு சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, ராணுவத் துறையில் நாம் சுயசார்புடன் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன. உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்கள் தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது உலக அளவில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர், நாம் சுயசார்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. இந்நேரத்தில், முப்படைகள் கூட்டாக இணைந்து செயல்படுவது, நம் எதிர்கால தேவைக்கு அவசியமாகும். இதற்கான முயற்சி துவங்கியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.