‘எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளது, இந்நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞரான விஜயா கட்டேவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’ என, பிரபல அரசியல் விமர்சகர் சாகர் என்ஜட்டி பதிவிட்டிருந்தார். டுவிட்டரில் செய்யப்படும் பதிவுகளை தணிக்கை செய்து, சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது, கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை, இந்தியாவை பூர்வீகமாக உடைய வழக்கறிஞர் விஜயா கட்டே தான் செய்து வந்தார். இந்நிலையில், சாகர் என்ஜட்டி வெளியிட்ட பதிவைக் குறிப்பிட்டு, எலான் மஸ்க் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், டுவிட்டரின் தணிக்கை முறையை விமர்சித்திருந்தார். இதையடுத்து, டுவிட்டரின் தணிக்கை முறை தொடர்பாக பலரும் விமர்சித்து பதிவிட்டுள்ளனர். குறிப்பாக விஜயா கட்டேவை அவர்கள் விமர்சித்துள்ளனர்.
‘எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளது, இந்நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞரான விஜயா கட்டேவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’ என, பிரபல அரசியல் விமர்சகர் சாகர் என்ஜட்டி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.