இந்திய அதிகாரிக்கு எதிராக பதிவுகள்| Dinamalar

‘எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளது, இந்நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞரான விஜயா கட்டேவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’ என, பிரபல அரசியல் விமர்சகர் சாகர் என்ஜட்டி பதிவிட்டிருந்தார்.
டுவிட்டரில் செய்யப்படும் பதிவுகளை தணிக்கை செய்து, சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது, கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை, இந்தியாவை பூர்வீகமாக உடைய வழக்கறிஞர் விஜயா கட்டே தான் செய்து வந்தார்.
இந்நிலையில், சாகர் என்ஜட்டி வெளியிட்ட பதிவைக் குறிப்பிட்டு, எலான் மஸ்க் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், டுவிட்டரின் தணிக்கை முறையை விமர்சித்திருந்தார். இதையடுத்து, டுவிட்டரின் தணிக்கை முறை தொடர்பாக பலரும் விமர்சித்து பதிவிட்டுள்ளனர். குறிப்பாக விஜயா கட்டேவை அவர்கள் விமர்சித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.