தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடுமுறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய மே 7-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.