ஐ.நா. பாதுகாப்பு சபை மீது அன்டோனியோ குட்டரெஸ் குற்றச்சாட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பாதுகாப்பு சபை தவறிவிட்டது என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குற்றம்சாட்டியுள்ளார்

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்கு மேல் தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் ன்டோனியோ குட்டரெஸ் ரஷ்யா- உக்ரைன் இடையே சமரசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

latest tamil news

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்று, அதிபர் விளாடிமிர் புடினையும், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவையும் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக நேற்று (ஏப். 28-ம் தேதி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துபேசினார்.இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசித்தார்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரத்தில் பாதுகாப்பு சபைக்கு சகல அதிகாரம் இருந்தும் அந்த அமைப்பு தோல்வியடைந்துவிட்டது. இது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.