நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் சீனாவின் ஊடுருவலை தகர்க்கவும், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய Mi-17V5 வகை ஹெலிகாப்டர்களில், இஸ்ரேலின் நவீன டேங்கர் எதிர்ப்பு ஏவுகணைகளை சேர்க்க இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.
30 கிலோ மீட்டர் தூர அளவில் வான் மற்றும் தரையில் இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான நான்காம் தலைமுறை தொழில் நுட்பத்துடன் கூடிய டேங்கர் எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேலின் தளவாட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையிலான ஏவுகணைகளை வாங்கவும் தொடர்ந்து ஏவுகணைகளை மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கவும் பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ள