சூர்யா & பாலா திரைப்படம்…பரவும் வதந்தியால் வருத்தத்தில் ரசிகர்கள்..!

சூரரைப்போற்று,
ஜெய் பீம்
ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின்
எதற்கும் துணிந்தவன்
திரைப்படம் திரையில் வெளியானது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக சூர்யாவை திரையில் காணாத ரசிகர்கள் இப்படத்திற்கு அமோக வரவேற்பு அளித்தனர்.

சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் OTT யில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இருப்பினும் திரையரங்கில் வெளியான எதற்கும் துணிந்தவன் அந்தளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவு சுமாரான வெற்றியை பெற்றது.

அஜித் ஒரு முடிவோடுதான் இருக்காரு போல…வெளியான தகவலால் குஷியில் ரசிகர்கள்..!

இதைத்தொடர்ந்து
சூர்யா
தற்போது வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் பாலாவின் திரைப்படம் என நடித்துவருகிறார். 18 ஆண்டுகள் கழித்து இயக்குனர் பாலாவுடன் சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 2D நிறுவனம் சார்பாக சூர்யா தயாரிக்கும் இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும்
ஜோதிகா
இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்

ஜி.வி.பிரகாஷ்
இசையமைக்கும் இப்படத்தில் க்ரிதி ஷெட்டியும் நடிக்கின்றார். மேலும் இப்படம் வழக்கமான
பாலா
படமாகவும் அதே சமயத்தில் அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும் படியும் உருவாகிவருவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் தற்போது இப்படத்தைப்பற்றி பரவும் வதந்தியால் சூர்யா ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

அதாவது சூர்யா மற்றும் பாலா இணைந்துள்ள இப்படம் OTT யில் வெளியாகவிருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் படங்களைப்போல சூர்யாவின் இப்படமும் OTT யில் வெளியாகவுள்ளதாக வதந்திகள் வருகின்றன. இருப்பினும் சிலர் இதெல்லாம் வெறும் வதந்திதான் எனவும் இப்படம் கண்டிப்பாக திரையில் தான் வெளியாகும் எனவும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

பிறமொழி படங்கள் தமிழகத்தில் நல்லா ஓடுறது புதுசில்ல – மணிரத்னம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.