திருவனந்தபுரம்:
திருச்சூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சில குதிரைகள் வேகமாக ஓடின. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை குதிரை எட்டி உதைத்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதற்கிடையே இன்னொரு குதிரை மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் குதிரை பரிதாபமாக இறந்தது. தேசிய நெடுஞ்சாலையில் குதிரைகள் மிரண்டு ஓடியதற்கு யானைகளின் பிளிறலே காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.