திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம்.. வித்தை காட்டிய நபர் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கைது

ஒடிசாவில் திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம் ஆடி வித்தை காட்டிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த புதன்கிழமை கரண்ஜியா நகரில் நடந்த திருமண நிகழ்வில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம் ஆடி 5 பேர் வித்தை காட்டினர். கூடையில் இருந்து வெளியே வரும் பாம்பை கொண்டு வீரர் வித்தை காட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.

பாம்புபிடி வீரர் குறித்து பொது மக்கள் அளித்த புகாரில் சம்பவம் இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பாம்பை மீட்டனர். தப்பியோடிய 5 பேரை மடக்கிப் பிடித்த வனத்துறையினர், பாம்பு பிடி வீரரை வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.