அனல்மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையை போக்க ஒன்றிய அரசு அவசர நடவடிக்கை

டெல்லி: நாட்டில் அனல்மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை போக்க ஒன்றிய அரசு அவசர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநிலங்களுக்கு போதுமான அளவு நிலக்கரியை சரக்கு ரயில் சேவை மூலம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. சரக்கு ரயில்களில் அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை எடுத்து செல்ல ஏதுவாக சாதாரண பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. நாட்டில் மின் பற்றாக்குறை சீரானதும், ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்கும் என ரயில்வேத்துறை தெரிவித்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.